(பதிவு எண் 874/2006) மனை எண் 50, விஜய நகர் (தீரன் நகர் பின்புறம்), திருச்சிராப்பள்ளி- 620 009 .

Monday 17 September 2018

தொண்டமாந்துறை – அம்பேத்கர் நினைவு கல்வி வளர்ச்சி மைய விழா


திருச்சி சித்தார்த்தா அறக்கட்டளையின் இணைப் பொதுச் செயலாளராக இருப்பவர். டெபுடி கலெக்டராக இருந்து பணி ஓய்வு பெற்ற திரு T.K. வீராசாமி அவர்கள். பணி ஓய்வு பெற்ற பின்பும் இன்னும் சமூக நலத் தொண்டுகளில், ஆர்வம் காட்டி வரும் அவருக்கு, தனது சொந்த ஊரான தொண்டமாந்துறை (பெரம்பலூர் மாவட்டம்) கிராமத்தில், நூலகத்துடன் கூடிய ஒரு சமுதாயக் கூடத்தை கட்டி விட வேண்டும் என்பது நீண்டநாள் கனவாக இருந்து வந்தது.

கல்வி மைய திறப்புவிழா (14.04.18)

அண்மையில், அய்யா T.K. வீராசாமி அவர்களது வாழ்நாள் கனவு நிறைவேறியது எனலாம். டாக்டர் அம்பேத்கரின் பிறந்தநாளான 14.04.2018 (சனிக் கிழமை) அன்று அவரது சொந்த ஊரான தொண்டமாந்துறை (பெரம்பலூர் மாவட்டம்) கிராமத்தில் ‘அண்ணல் அம்பேத்கர் நினைவு கல்வி வளர்ச்சி மையம்’ திறப்புவிழா நடைபெற்றது. இந்த மையத்தின் பயன்பாட்டிற்காக, அய்யா அவர்கள் தனது சொந்த இடத்தை லட்சக்கணக்கில் செலவு செய்து அமைத்துக் கொடுத்துள்ளார்.

விழாநாள் அன்று, இந்நிகழ்ச்சியின் தொடக்கமாக, நமது அறக்கட்டளையின் பொதுச்செயலாளர் ஆ.கருணாகரன் அவர்கள் மையத்தினை திறந்து வைத்தார். பேராசிரியர் திரு A.நல்லுசாமி அவர்கள் ரிப்பன் வெட்டி மையத்தின் பெயர்ப்பலகையை திறந்து வைத்து சிறப்புரை செய்தார்.


படம் மேலே) மைய பெயர்ப்பலகை திறப்பு

தனது சிறப்புரையில் பேராசிரியர் அவர்கள், திரு T.K. வீராசாமி அவர்களின் சமுதாயத் தொண்டு மற்றும் அவரது வாழ்நாள் கனவான, சொந்த ஊரில் ஒரு நூலகம் என்பது குறித்தும் பாராட்டி பேசினார். பின்னர் திருச்சி சித்தார்த்தா அறக்கட்டளை சார்பாக, திரு T.K. வீராசாமி – திருமதி தனலட்சுமி தம்பதியினருக்கு பொன்னாடை போர்த்தி கௌரவித்தார். 




(படங்கள் - மேலே) திரு A.நல்லுசாமி சிறப்புரை மற்றும் பொன்னாடை போர்த்தும் நிகழ்ச்சி

படம் மேலே) மேடையில் T.K. வீராசாமி – தனலட்சுமி தம்பதியர்

விழாவில் போட்டிகளில் பங்கேற்று வெற்றி பெற்ற, பள்ளி மாணவ மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. விழாவில் உள்ளூர் கிராம மக்களும், அறக்கட்டளை நிர்வாகிகளும் கலந்து கொண்டனர். விழா முடிவில் மதிய உணவு வழங்கப்பட்டது.  (அப்போது எடுத்த சில படங்கள் கீழே)













பள்ளிப் பைகள் அன்பளிப்பு (17.06.18)

மேலே நடைபெற்ற அம்பேத்கர் நினைவு கல்வி வளர்ச்சி மைய திறப்பு விழாவினைத் தொடர்ந்து, தொண்டமாந்துறை (பெரம்பலூர் மாவட்டம்) கிராம பள்ளி பிள்ளைகளுக்கு, பள்ளி பைகள் (SCHOOL BAGS) வழங்கும் நிகழ்ச்சி 17.06.18 ஞாயிறு அன்று நடைபெற்றது. அப்போது எடுக்கப்பட்ட சில படங்கள் கீழே





கல்வி மையத்தின் நோக்கம்:

தொண்டமாந்துறையில் அமைந்துள்ள அண்ணல் அம்பேத்கர் நினைவு கல்வி வளர்ச்சி மையத்தின் நோக்கங்களான நல்லொழுக்கம், நற்பண்பு, நற்கருணை, கிராமப்புற மாணவர்கள் கல்வி முன்னேற்றம், அவர்களின் திறன் மேம்பாடு ஆகியவற்றை ஊக்குவிக்கும் பொருட்டு சிறந்த நூல்கள், மடிக்கணினி, சிடிக்கள் ஆகியவற்றுடன் ஒரு நூலகம் உள்ளது; 

மேலும் இங்கு இலவசமாக பன்மொழிப் பயிற்சி, முதியோர் கல்வி, பள்ளிப் பிள்ளைகளுக்கு டியூஷன் மற்றும் அரசு - தனியார் துறைகள் நடத்தும் வேலைவாய்ப்பு போட்டித் தேர்வுக்கான பயிற்சி அளித்தல் ஆகியவற்றிற்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டு, ஆசிரியர்கள் மற்றும் பொறுப்பாளர்கள் நியமிக்கப் பட்டுள்ளனர். இவை அனைத்திற்குமான நிர்வாகப் பொறுப்பிற்கான செலவுகளை அய்யா T.K. வீராசாமி அவர்களே செய்து வருகிறார்.

(கட்டுரை ஆக்கம் மற்றும் பதிவேற்றம்: தி.தமிழ் இளங்கோ – படங்கள்உதவி: (நன்றியுடன்) திரு T.K.வீராசாமி )

                   …… xxxxxxxxxxxxxxxxxxxxxxxxx …… 
நமது அறக்கட்டளை சார்பாக  ஃபேஸ்புக் (FACE BOOK) இல்  SIDDHARTHA TRUST TRICHY  என்ற பெயரில் இணையதளம் கணக்கு ஒன்று உள்ளது. ஃபேஸ்புக்கில் இருப்பவர்களை எமது தளத்தைப் பார்வையிட வருமாறு அன்புடன் அழைக்கின்றோம்!  
 

Thursday 18 January 2018

புத்தாண்டு மற்றும் பொங்கல் விழா (2018)

 அன்புடையீர் வணக்கம்!

நமது அறக்கட்டளையின் சார்பாக நேற்று முன்தினம் (16.01.2018 – செவ்வாய்க் கிழமை) காலை, நமது  சித்தார்த்தா அரங்கம்என்ற நமது கட்டிட வளாகத்தில், புத்தாண்டு மற்றும்  பொங்கல் விழா சிறப்பாக கொண்டாடப் பட்டது.


அழைப்பிதழ்
இந்த விழாவிற்கான அழைப்பிதழ் அறக்கட்டளை உறுப்பினர்களுக்கும் மற்றும் நண்பர்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டது.



விழா துவங்குவதற்கு முன்

(படம் மேலே) திரு சாந்த.முத்தையா மற்றும் திரு கருணாகரன்

 (படம் மேலே) திரு தாமரைச் செல்வன், திரு நல்லுசாமி, திரு சாந்த.முத்தையா மற்றும் கருணாகரன்

சித்தார்த்தா அரங்கத்தின் மேல்தளத்தில் நமது அறக்கட்டளையின் மகளிர் அணியினர். சர்க்கரைப் பொங்கல், வெண் பொங்கல், பால்சாதம் மற்றும் சாம்பார் வைக்கும் பணியில் ஈடுபட்டனர். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் கீழே.






ஆன்றோர்களுக்கு மரியாதை

பின்னர் கீழ்தளத்தில் (சித்தார்த்தா அரங்கம்) கவிமாமணி பொறியாளர் சாந்த.முத்தைய்யா அவர்கள் தலைமையில் விழா தொடங்கியது. நலிவுற்ற சமுதாயம் நலம் பெறவும், வளம் பெறவும், தங்களை அர்ப்பணித்துக் கொண்ட ஆன்றோர்கள் இருந்த படத்தின் முன் அனைவரும் கூடி மரியாதை செய்தனர்.



சிறப்பு விருந்தினர்


இந்த கூட்டத்தின் சிறப்பு விருந்தினராக, அமெரிக்காவில் வசிக்கும் திரு P.தாமரைச் செல்வன், M.E., M.S., PhD., (USA) அவர்கள் கலந்து கொண்டார்.







(படம் மேலே - முன் வரிசையில்) திருமதி & திரு பூமிநாதன், T.K.வீராசாமி




இந்த விழாவிற்கு திரு பூமிநாதன் (அட்வகேட், மதுரை ஹைகோர்ட்))) அவர்கள் தனது மனைவியுடன் வந்து கலந்து கொண்டார். கூட்டத்தின் முடிவில் திரு ராஜாமணி (Manager Retd, IOB) அவர்கள் நன்றி கூறினார்.

நிறைவு





பின்னர் இனிப்பு பொங்கல் , பால்சாதம் மற்றும் வெண் பொங்கலோடு சாம்பாரும் சேர்த்து உணவு பரிமாறப்பட்டது.   விழாவிற்கான ஏற்பாடுகளை IOB மேலாளர் ( ஓய்வு) திரு K சின்னசாமி  (அறங்காவலர். சித்தார்த்தா அறக்கட்டளை ) அவர்களும் மற்றும் திரு முத்து (TNCSC Retd) அவர்களும் சிறப்பாக செய்து இருந்தனர். 

(படம் மேலே) சித்தார்த்தா அரங்க கல்வெட்டில் உள்ள புத்தர் படம்


நமது அறக்கட்டளை சார்பாக  ஃபேஸ்புக் (FACE BOOK) இல்  SIDDHARTHA TRUST TRICHY  என்ற பெயரில் இணையதளம் கணக்கு ஒன்று உள்ளது. ஃபேஸ்புக்கில் இருப்பவர்களை எமது தளத்தைப் பார்வையிட வருமாறு அன்புடன் அழைக்கின்றோம்!