(பதிவு எண் 874/2006) மனை எண் 50, விஜய நகர் (தீரன் நகர் பின்புறம்), திருச்சிராப்பள்ளி- 620 009 .

Tuesday 17 January 2017

முப்பெரும் விழா (ஜனவரி 2017)



அன்புடையீர் வணக்கம்!

தங்களின் மேலான ஆதரவுடன், நமது அறக்கட்டளையின் சார்பாக நேற்று, 16.01.2017 (திங்கள்) அன்று ’சித்தார்த்தா அரங்கம்’ என்ற நமது கட்டிட வளாகத்தில் பொங்கல், திருவள்ளுவர் தினம் மற்றும் உழவர் தினம் என்ற முப்பெரும் விழா சிறப்பாக நடைபெற்றது. அதுசமயம் பெரியவர் திரு M.துரைசாமி (இணை இயக்குநர் ஓய்வு) அவர்களும் மற்றும் திரு A.சின்னச்சாமி (ஜெயங்கொண்டம் தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ) அவர்களும் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.

அழைப்பிதழ்:

இந்த முப்பெரும் விழாவிற்கு வெளியிடப்பட்ட அழைப்பிதழ் கீழே.


விழா தொடங்கும் முன்: 

சித்தார்த்தா அரங்கத்தின் மேல்தளத்தில் விழா தொடங்கும் முன் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் கீழே.


திருவள்ளுவர் படத்திற்கு மாலை:

விழா தொடங்கியவுடன்,   திருவள்ளுவர் படத்திற்கு, தலைவர்,  கவிமாமணி பொறியாளர் சாந்த.முத்தைய்யா அவர்கள் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது பின்னர் விழாவுக்கு வந்திருந்த அனைவரும், திருவள்ளுவர் படத்திற்கு மலர் தூவி தங்கள் அன்பை வெளிப்படுத்தினர். மேலும் ஒவ்வொருவரும் ஒரு குறளைச் சொன்னார்கள்.


சித்தார்த்தா அரங்கத்தில்

மேல்தளத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிகளுக்குப் பிறகு, கீழ்த்தளத்தில் (சித்தார்த்தா அரங்கத்தில்) முப்பெரும் விழாவின் ஏனைய நிகழ்ச்சிகள் சிறப்பாக நடைபெற்றன. 

நிறைவு

பின்னர் இனிப்பு பொங்கல் மற்றும் வெண் பொங்கலோடு உணவு பரிமாறப்பட்டது.   விழாவிற்கான ஏற்பாடுகளை IOB மேலாளர் ( ஓய்வு) திரு K சின்னசாமி B.Sc ( Agri ) (அறங்காவலர். சித்தார்த்தா அறக்கட்டளை ) அவர்கள்  சிறப்பாக செய்து இருந்தார். அவர் நன்றியரை கூற விழா இனிதே நிறைவுற்றது.


முக்கிய அறிவிப்பு: 

நமது அறக்கட்டளை சார்பாக  ஃபேஸ்புக்கில் (FACE BOOK) இல்  SIDDHARTHA TRUST TRICHY  என்ற பெயரில் இணையதளம் கணக்கு ஒன்று உள்ளது. ஃபேஸ்புக்கில் இருப்பவர்களை எமது தளத்தைப் பார்வையிட வருமாறு அன்புடன் அழைக்கின்றோம்! https://www.facebook.com/trichysiddhartha