பேரன்புடையீர் வணக்கம்!
நாளது 06.12.2013 வெள்ளி காலை 10.00 மணியளவில், திருச்சிராப்பள்ளி அரிஸ்டோ
ஹோட்டல் ரவுண்டானாவில், அமையப்பெற்றுள்ள அண்ணல் டாக்டர் பாபா சாகேப் அம்பேத்கர்
அவர்களின் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தும்
நிகழ்ச்சியிலும்,
அதன் பின்னர், காலை 11.00 மணியளவில், மனை எண் 50, விஜய நகர் (தீரன் நகர் பின்புறம்) திருச்சி,(கருமண்டபம் அருகில்) அமையப் பெற்றுள்ள சித்தார்த்தா அறக்கட்டளையின் புதிய
கட்டடத்தில் நடைபெற உள்ள நினைவு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சியிலும்,
அதனைத் தொடர்ந்து அறக்கட்டளையின் , எதிர்காலத் திட்டம் பற்றிய தொலை நோக்குடன்
கூடிய கலந்துரையாடலிலும். பங்கேற்று தங்களின் அரிய யோசனைகளை வழங்கிட வேண்டுகிறோம்.
“ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு” என்ற தாரக மந்திரத்தின்படி உணர்வுடன் “ஒன்று கூடுவோம்! வெனறு வாழ்வோம்”
தங்கள் வருகை எங்கள் பெருமை!
தலைவர் மற்றும் அறங்காவலர்கள்
சித்தார்த்தா அறக்கட்டளை,
திருச்சிராப்பள்ளி.1 சித்தார்த்தா அறக்கட்டளை,
நாள்: 04.12.2013

