(பதிவு எண் 874/2006) மனை எண் 50, விஜய நகர் (தீரன் நகர் பின்புறம்), திருச்சிராப்பள்ளி- 620 009 .

Monday 28 April 2014

முனைவர் R. கிறிஸ்துதாஸ் காந்தி I.A.S – அவர்கள் வருகை!



அன்புடையீர் வணக்கம்!

அம்பேத்கர் கல்வி நூற்றாண்டு இயக்கம் (AMBEDKAR – KALVI CENTENARY MOVEMENT) நிறுவனர் முனைவர் R. கிறிஸ்துதாஸ் காந்தி I.A.S அவர்கள் , 26.04.2014 அன்று ( சனிக் கிழமை, முற்பகல் )  மத்திய அரசு கல்வி உதவித் தொகை (G.O No 92 Post Matric Scholarship) சம்பந்தமாக உதய தீபம் அரங்கத்திற்கு (கருமண்டபம்) வந்து ”கல்வி வழிகாட்டி” உரையாற்றினார். அதன் பின்னர் ,அவர் நமது அறக் கட்டளையின் கல்வி மற்றும் பல்நோக்கு சமுதாயக் கூடம் கட்டிடத்திற்கு மாலை வருகை தந்தார்.

அவருடன் அருட்பணி.ஆல்பர்ட் நெல்சன் (TNBC's Commission for SC/ST, Udhaya Deepam, Trichy) அவர்களும் கல்வி வழிகாட்டி நண்பர்களும் உடன் வந்தனர். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள். 

(Executive Profile:    
Dr. Christodas Gandhi, IAS (Retd.) is a true follower of our Great Leader Babasaheb Dr. B.R. Ambedkar. During his tenure as an Administrator, he did an excellent awakening service in ameliorating the poor SC/ST’s more particularly the entrepreneurial youths and budding youngsters. He has held several portfolios, including that of Additional Chief Secretary/ Development Commissioner, Planning and Development Department; Collector of Erode District; and Chairman and Managing Director of Tamil Nadu Energy Development Agency. 



படம் (மேலே) கட்டிட வாசலில் பேராசிரியர் A.நல்லுசாமி மற்றும் அருட்பணி.ஆல்பர்ட் நெல்சன்


படம் (மேலே) கட்டிட வாசலில் அருட்பணி.ஆல்பர்ட் நெல்சன் மற்றும் R. கிறிஸ்துதாஸ் காந்தி  


படம் (மேலே) 2624 கிறிஸ்துதாஸ் காந்தி அவர்கள் நமது கட்டிடத்தை பார்வையிடுகிறார். படத்தில் - அன்பழகன், மதன் ராஜ்(Lawyer), பாஸ்கர் (Lawyer), பேராசிரியர் A. நல்லுசாமி, கிறிஸ்துதாஸ் காந்தி மற்றும் T.K.வீராசாமி


படம் (மேலே) இதுவும் அது (பின் வாசல்)


படம் (மேலே) இதுவும் அது


படம் (மேலே) R. கிறிஸ்துதாஸ் காந்தி அவர்களுக்கு பொன்னாடை போர்த்தி சிறப்பு செய்யப்பட்டது. அருகில் T.K. வீராசாமி, A.கருணாகரன் மற்றும் K.சின்னச்சாமி


படம் (மேலே) கலந்துரையாடல்
  
படம் (மேலே) இதுவும் அது

படம் (மேலே) இதுவும் அது

படம் (மேலே) இதுவும் அது

படம் (மேலே) கலந்துரையாடல் கூட்டம் முடிந்த பிறகு



முக்கிய அறிவிப்பு: 

  
நமது அறக்கட்டளை சார்பாக  FACE BOOK – இல்  SIDDHARTHA TRUST TRICHY  என்ற பெயரில் இணையதளம் கணக்கு ஒன்று திறக்கப்பட்டுள்ளது.  FACE BOOK இல் இருப்பவர்களை எமது தளத்தைப் பார்வையிட வருமாறு அன்புடன் அழைக்கின்றோம்

 

Saturday 19 April 2014

டாக்டர் அம்பேத்கர் 124 -ஆவது பிறந்த நாள் விழா ( 2014)



அன்புடையீர் வணக்கம்!

நமது சித்தார்த்தா அறக்கட்டளை, திருச்சி சார்பாக அண்ணல் டாக்டர் அம்பேத்கரின் 124-ஆவது  பிறந்தநாள் விழா 14.04.2014 திங்கட் கிழமை அன்று நமது கட்டட வளாகத்தில் கொண்டாடப்பட்டது..  .

டாக்டர் அம்பேத்கர் சிலைக்கு மாலை:

முன்னதாக டாக்டர் அம்பேத்கர் பிறந்த நாளை முன்னிட்டு,  14.04.2014 திங்கள்  காலை திருச்சி அரிஸ்டோ ரவுன்டாணாவில் உள்ள  அவரது சிலைக்கு  நமது அறக்கட்டளை சார்பாக  டாக்டர் சின்னையா அவர்கள் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது.





டாக்டர் அம்பேத்கரின் பிறந்தநாள் விழா





பின்பு சுமார் 11 மணி அளவில் நமது கட்டட வளாகத்தில் திரு S.நம்பியார் அவர்கள் பாடிய புத்தம் சரணத்துடன் நிகழ்ச்சிகள் தொடங்கி




பின்னர் அரங்கினுள் புத்தர், டாக்டர் அம்பேத்கர் படங்களுக்கு மாலைகள் அணிவிக்கப்பட்டன.

















பேராசிரியர்  M.கோவிந்தராஜ் ( கணினித்துறை, பாரதிதாசன் பல்கலைக்கழகம் ) அவர்கள்,  கம்ப்யூட்டர் மூலம், வெண்திரையில் குத்துவிளக்கு ஏற்றும் நிகழ்ச்சியை பவர் பாயிண்ட் ( POWER POINT ) முறையில் உருவாக்கி வைத்து இருந்தார். அந்த படத்திறகான வெண் திரையில் உள்ள குத்து விளக்கை திருவாளர்கள் என்ஜீனியர் சாந்த முத்தையா, முனைவர் செல்வம் ,  சிவபிச்சை, டாக்டர் சின்னையா , A.கருணாகரன், T.K.வீராசாமிஆகியோர் கம்ப்யூட்டர் மவுஸ் வழியாக ஒளி ஏற்றி வைத்தனர்





பின்னர் வந்திருந்தோரின் சுய அறிமுகம் தொடங்கியது. அதன் பின்னர் திரையில் சித்தார்த்தா அறக் கட்டளை பற்றிய குறு ஆவணப்படம் ஒன்று திரையிடப்பட்டது. பேராசிரியர் A. நல்லுசாமி அவர்கள் ஆவணப்படத்திற்கான விளக்கவுரையை தந்தார்.









பின்னர் வெண்திரையில் அம்பேத்கர் தமிழ் திரைப்படம் திரையிடப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை பேராசிரியர்  M.கோவிந்தராஜ் ( கணினித்துறை, பாரதிதாசன் பல்கலைக்கழகம் )
தி தமிழ் இளங்கோ (S.B.I – VRS ) மற்றும் இருதயராஜ் ( ஒலி ஒளி அமைப்பு) ஆகியோர் செய்து இருந்தனர்.





மதிய உணவிற்குப் பிறகு விழா இனிதே நிறைவுற்றது



விழாவிற்கான ஏற்பாடுகளை T.K.வீராசாமி (பொதுச் செயலாளர்), பேராசிரியர் A. நல்லுசாமி அவர்கள் மற்றும்   திரு K சின்னசாமி B.Sc ( Agri ) (அறங்காவலர் ) அவர்கள் ஆகியோர் சிறப்பாக செய்து இருந்தார்கள்.

                                                             வணக்கம்!





Wednesday 9 April 2014

124- ஆவது பிறந்தநாள் விழா அழைப்பிதழ்



                                  சித்தார்த்தா அறக்கட்டளை திருச்சி
                                      (பதிவு எண் : 874/ 2006)
       மனை எண் 50, விஜய நகர்,  தீரன் நகர் பின்புறம், திருச்சி.620 009


                      அண்ணல் டாக்டர் B.R.அம்பேத்கர் அவர்களின் 124 ஆவது  
                                                 பிறந்தநாள் விழா  அழைப்பிதழ்


பேரன்புடையீர் வணக்கம்!

நாளது 14.04.2014  திங்கட் கிழமை காலை 10.00 மணியளவில், மனை எண் 50, விஜய நகர் (தீரன் நகர் பின்புறம்) திருச்சி.620 009 (கருமண்டபம் அருகில்) அமையப் பெற்றுள்ள சித்தார்த்தா அறக்கட்டளையின் புதிய கட்டடத்தில் நடைபெற உள்ள அண்ணல் டாக்டர் B.R.அம்பேத்கர் அவர்களின் 124 ஆவது  பிறந்தநாள் விழா நிகழ்ச்சியிலும்,

அதனைத் தொடர்ந்து நடைபெறும் கலந்துரையாடல் மற்றும் ஆலோசனை நிகழ்ச்சிகளிலும் குடும்பத்துடன் பங்கேற்று, அறக்கட்டளையின் வளர்ச்சிக்கும், எதிர்கால திட்டங்களுக்கும் ஆலோசனை வழங்கிட வேண்டுகிறோம்.

இவண்,
தலைவர் மற்றும் அறங்காவலர்கள்
சித்தார்த்தா அறக்கட்டளை, திருச்சிராப்பள்ளி.
நாள்: 09.04.2014
தலைவர்
கவிமாமணி பொறியாளர் சாந்த.முத்தைய்யா B.E.,M.I.E.,M.I.G.S.,FIV.
துணைத் தலைவர்கள்:
Dr. N சின்னையா M.B.B.S.,M.S ஆதி. பெரு.பழனியப்பன் M.A.,B.L., R.தங்கராசு B.E. M.சந்திரகாசன் M.A
பொதுச்செயலாளர்:கவிஞர் ஆ.கருணாகரன் M.A.
இணைப் பொதுச் செயலாளர்: T.K.வீராசாமி B.A.
பொருளாளர்: A.குருசாமி M.A.
இணைச் செயலாளர்கள்: பேரா.ஆ.நல்லுசாமி M.A.,M.Phil., சங்க.நல்லுசாமி B.A., அண்ணா.ஏகாம்பரம் D.C.E
அறங்காவலர்கள் குழு:  A நல்லுசாமி M.A. D.R.O (Retd), K இராமச்சந்திரன் M.A.,B.L., முல்லைச் செல்வன் M.A, M.முத்துச்சாமி B.E.,M.E.,Phd., M ஜெகன்நாதன் M.A
S நம்பியார் M.A, தி தமிழ் இளங்கோ M.A., K சின்னசாமி B.Sc ( Agri ), சங்கர், சென்னை






Tuesday 8 April 2014

நிலை வைக்கும் நிகழ்ச்சி



அன்புடையீர் வணக்கம்!
நமது அறக்கட்டளையின் கல்வி மற்றும் பல்நோக்கு சமுதாயக் கூடத்தில் 29.03..2014 ( ஞாயிறு ) அன்று  கீழ்தளத்தில் நுழைவு வாயிலில் நிலை வைக்கும் பணி சிறப்பாக நடைபெற்றது. அப்போது எடுக்கப்பட்ட புகைப் படங்களை இங்கு காணலாம்.